வெளுத்து வாங்கிய ஜெய்ஸ்வால் – கில்: இந்தியா அபார வெற்றி!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அணி அபார வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஹாய் ஹோப் 29 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 45 ரன்களும், ஹெட்மயர் 39 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 61 ரன்களும் குவித்தனர்.

இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 51 பந்துகளில் 11 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உடன் 84 ரன்களும், சுப்மன் கில் 47 பந்துகள் 3 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 77 ரன்களும் குவித்து அசத்தினர்.

இதனால் 17 ஓவர்கள் முடிவிலேயே 1 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கான 179 ரன்களை அடைந்தது.

இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-2 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News