இந்தியா
கேரளாவில் படகு இல்லம் மூழ்கி விபத்து – ஒருவர் பலி, 4 பேருக்கு சிகிச்சை
கேரளாவில் முக்கிய சுற்றுலாத் தளமாக ஆலப்புழா திகழ்கிறது. இந்த சுற்றுலா தளத்திற்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து ராமசந்திர ரெட்டி என்ற நபர் தனது மகன் ரஜேஷ் ரெட்டி உறவினர் நரேந்தர், நரேஷ் ஆகியோருடன் ஆலப்புழாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/12/kerala-house-boat.jpg)
அதன் பிறகு படகு இல்லம் ஒன்றை புக் செய்து இரவை அதில் கழித்துள்ளனர். அந்த படகு இன்று அதிகாலை 4 மணி அளவில் நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளது. இதனால் படகுக்குள் இருந்த 5 பேரும் நீரில் மூழ்கினர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் நீரில் மூழ்கிய 5 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ராமசந்திரா ரெட்டி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். மீதமுள்ள 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)
You must be logged in to post a comment Login