Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

நடிகையின் உள்ளாடையில் விந்தனுக்கள்.. மரணத்தில் கிடைத்த புதிய துப்பு.. என்ன நடக்கப்போகிறதோ..

இந்தியா

நடிகையின் உள்ளாடையில் விந்தனுக்கள்.. மரணத்தில் கிடைத்த புதிய துப்பு.. என்ன நடக்கப்போகிறதோ..

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் பகுதியை சேர்ந்தவர் அகன்சா துபே. போஜ்பூரி மொழி சினிமாவில் நடித்து வந்த இவருக்கு, ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், இந்த நடிகை, வாரணாசி பகுதிக்கு, படப்பிடிப்பிற்காக சென்றபோது, தனது அறையில், தூக்கில் தொங்கியபடி, சடலமாக கிடந்துள்ளார்.

இதனைக் கண்ட அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்கு, தகவல் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அந்த நடிகையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நடிகையின் மரணத்திற்கு, அவரது காதலர் காரணம் என்பதை, விசாரணையின் மூலம் கண்டறிந்தனர்.

இதையடுத்து, காதலன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கில் புதிய திருப்பமாக, அந்த நடிகையின் உள்ளாடையில், விந்தனுக்கள் இருந்ததாக தற்போது தெரியவந்துள்ளது.

இந்த விந்தனுக்களின் மாதிரிகளையும், காதலனின் டி.என்.ஏ-வையும், ஆய்வு செய்ய உள்ளனர். இந்த இரண்டும் ஒரே டி.என்.ஏ-வாக இருந்தால், குற்றம் விரைவிலேயே நிரூபிக்கப்படும். இதற்கான முயற்சியில், காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top