Connect with us

Raj News Tamil

தேர்தல் ஆணைய அலுவலக வளாகத்தில் குண்டுவெடிப்பு..!

உலகம்

தேர்தல் ஆணைய அலுவலக வளாகத்தில் குண்டுவெடிப்பு..!

அண்டை நாடான பாகிஸ்தானில் பிப்ரவரி 8ம் தேதி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பல்வேறு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் கராச்சி மாநகரில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தின் வாகன நிறுத்துமிடம் உள்ள பகுதியில் இன்று திடீரென குண்டு ஒன்று வெடித்தது. இது குறித்து தகவல் அறிந்ததும், பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், தேர்தல் ஆணைய அலுவலகத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பை ஒன்றை துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர் ஒருவர் குப்பையில் வீசிய போது அது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணைய அலுவலகத்திலேயே நிகழ்த்தப்பட்டுள்ள இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பாகிஸ்தான் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

More in உலகம்

To Top