கடந்த சில நாள்களாகவே பள்ளிகள், மருத்துவமனைகள், விமான நிலையங்களுக்கு அடிக்கடி மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து ரயில் நிலையங்களில் மோப்ப நாய் பிரிவு, வெடிகுண்டு பிரிவினர் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தில் பாமக கட்சிக்கு எதிராக திமுக செயல்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் “மதுராந்தகம் தாலுகா புக்கத்துறை கிராமம் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த மேகநாதன் என்பவரிடம் இருந்து இந்த கடிதம் வந்துள்ளதாகவும் அதில் வன்னிய சமுதாயத்தை ஒழித்து வரும் திமுக அரசை கண்டித்து சென்னை எக்மோர் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அந்த கடிதத்தில் திமுக ஆட்சியில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியை தரக்குறைவாக பேசி வரும் திமுக அரசுக்கும் கட்சிக்கும் ஒரு பாடகமாக கருதி சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் இரவு 12.15 மணி அளவில் வெடிகுண்டு வெடிக்கும்படி வைத்துள்ளேன். என் வன்னியர் சமுதாயத்துக்காக ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளது.