Connect with us

Raj News Tamil

பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளியே! – காவல்துறை அறிவிப்பு!

தமிழகம்

பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளியே! – காவல்துறை அறிவிப்பு!

சென்னையில் அண்ணாநகர், ஜே.ஜே. நகர், பாரிமுனை ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி நிர்வாகங்கள் உடனடியாக மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து மாணவர்களை அழைத்துச் செல்ல அறிவுறுத்தியிருந்தனர்.

இந்த தகவல் பல்வேறு பகுதிகளுக்கு பரவியதும், அனைத்து பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கு சென்று தங்களது பிள்ளைகளை அழைத்து செல்ல குவிந்துள்ளனர். இதனிடையே வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களின் உதவியோடு பள்ளிகளுக்குச் சென்று வெடிகுண்டு இருக்கிறதா என்று தேடும் பணியில் ஈடுபட்டனர்.

தேடுதல் பணியில், எந்தப் பள்ளியிலும் வெடிகுண்டு வைக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top