12 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி.. 30 வருடங்களுக்கு பிறகு கிடைத்த நீதி..

உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில், தனது அக்கா-மாமா வீட்டில், 12 வயது சிறுமி வசித்து வந்தார். அந்த 12 வயது சிறுமி, பள்ளிக்கு சென்றுவந்தபோது, 2 பேர் அவளை கிண்டல் செய்துள்ளனர்.

மேலும், அந்த பெண்ணை தொடர்ச்சியாக பின்தொடர்ந்து, அவளது வீட்டு விலாசத்தை அறிந்துள்ளனர். பின்னர், யாரும் இல்லாத நேரத்தில், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இதுகுறித்து யாரிடமும் கூற கூடாது என்றும் மிரட்டியுள்ளனர்.

இவ்வாறு தொடர்ச்சியாக, 2 ஆண்டுகளுக்கு சீரிழித்து உள்ளனர். ஒரு கட்டத்தில், அந்த சிறுமி கர்ப்பமாகி உள்ளார். அதன்பிறகு, அறிந்த குடும்பத்தினர், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால், அவர்களும், பாலியல் வன்கொடுமை செய்த நபர்களின் மிரட்டலுக்கு பயந்து, காவல்துறையில் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். இறுதியாக, அந்த பெண்ணுக்கு குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால், அந்த குழந்தையை கைவிட்ட உறவினர்கள், தூக்கி வீசியுள்ளனர்.

அதன்பிறகு, சிறுமியின் வாழ்க்கை மாறும் என்று உறவினர்கள் நம்பியுள்ளனர். இருப்பினும், பல்வேறு சோகங்களை சந்தித்த 12 வயது சிறுமிக்கு, சில வருடங்கள் கழித்து, இன்னொரு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரிந்ததும், கணவரும், அவரை ஒதுக்கியுள்ளார். மேலும், அந்த கணவருக்கு பிறந்த குழந்தையுடன், அந்த பெண்ணை வீட்டைவிட்டு துரத்தியுள்ளார்.

இறுதியில், லக்னோவிற்கு சென்ற அவர், தனது குழுந்தையை வளர்ந்து வந்தார். அப்போது, அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால், பெற்றெடுத்த குழுந்தை, தனது தாயை தேடி பல நாட்களுக்கு பிறகு வந்துள்ளான். அதன்பிறகு, 3 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில், தனது தாய்க்கு நடந்த அவலங்களை அறிந்த அந்த மகன், காவல்துறையில் புகார் அளித்தனர். மேலும், குற்றவாளியை, இரண்டு வருடங்கள் தேடி கண்டுபிடித்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்தி, தண்டனையை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

தற்போது, அந்த வழக்கில், குற்றவாளிகள் இரண்டு பேருக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த பெண்ணின் இத்தகைய பயணம், பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

முக்கிய குறிப்புகள்:-

12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட ஆண்டு – 1994 முதல் 1996 வரை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்களின் பெயர்கள் – முகமது ரசி மற்றும் ஹாசன் நாகி

குற்றம் நடந்தபோது, குற்றவாளிகளின் வயது – 25 மற்றும் 22

தண்டனை பெற்றபோது குற்றவாளிகள் வயது – 55 மற்றும் 52

பாதிக்கப்பட்ட சிறுமியின் தற்போதைய வயது – 42

பாலியல் வன்கொடுமையால் பிறந்த குழந்தையின் தற்போதைய வயது 30

இந்த வழக்கில், கடந்த 2024-ஆம் ஆண்டு மே 20-ஆம் தேதி தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News