Connect with us

Raj News Tamil

கோவில் பூட்டை உடைத்து அம்மன் சிலை திருட்டு : போலீசார் விசாரணை

தமிழகம்

கோவில் பூட்டை உடைத்து அம்மன் சிலை திருட்டு : போலீசார் விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு அடுத்த தொழுதாவூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மூலவர் சன்னதியில் 2.5 அடி உயரமுள்ள மாரியம்மன் செம்பு சிலையை கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து கருவறைக்குள் புகுந்து அம்மன் மூலவர் சிலையை திருடி சென்றுள்ளனர். கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற கிராம மக்கள் கோவிலின் அம்மன் சிலை திருடிச் சென்றுள்ளதை கண்டு அதிர்ச்சி அதிர்ச்சியடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக திருவலாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு பின்னர் வழக்குப்பதிவு செய்து அம்மன் சிலையை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top