Connect with us

Raj News Tamil

விராலிமலை முருகன் கோயிலில் மண் சிலைகளை உடைத்த மர்ம நபர்கள்..!!

தமிழகம்

விராலிமலை முருகன் கோயிலில் மண் சிலைகளை உடைத்த மர்ம நபர்கள்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை முருகன் கோவிலுக்கு ஏராளமான சிறப்புகள் உள்ளன. முருகப்பெருமான் பல அற்புதங்களை நிகழ்த்திய தலமாக இது போற்றப்படுகிறது.

இந்நிலையில் விராலிமலை மலைக்கோயில் பாதை ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த சுவாமி உருவத்திலான மண் சிலைகளை மர்ம நபர்கள் சிலர் உடைத்து சென்றுள்ளனர்.

கந்தசஷ்டி விழா நடைபெற்று வரும் இவ்வேளையில் சிலைகள் உடைக்கபட்டுள்ளது. எனவே உடைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More in தமிழகம்

To Top