நொறுங்கிய வேன் ! 3 குழந்தைகள் உற்பட 10 பேர் பலி !

குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மினி வேன் மோதியதில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுரேந்தீரநகரை சேர்ந்தவர்கள் அருகில் உள்ள கோயில்லுக்கு சென்று மினி வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ராஜ்கோட்-அகமதாபாத் நெடுஞ்சாலையில் உள்ள பகோதரா கிராமத்திற்கு அருகில் ஒரு லாரி பழுதாகி நின்று கொண்டு இருந்தது.

இந்நிலையில் ,அங்கு வந்து கொண்டிருந்த ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன், திடீரென சாலையின் ஓரத்தில் பழுதடைந்து நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் 3 குழந்தைகள் 5 பெண்கள் உள்பட 10 பேர் பரிதாபமாக பலியானார்கள். 13 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் , இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News