Connect with us

Raj News Tamil

தம்பியை தீ வைத்து கொளுத்திய அண்ணன்!

தமிழகம்

தம்பியை தீ வைத்து கொளுத்திய அண்ணன்!

நெல்லை மாவட்ட நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சியை சேர்ந்த வானமாமலை (30) என்பவர் கடந்த வாரம் மது அருந்தி விட்டு வீட்டு திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் அவரை தீ வைத்து கொளுத்தியுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தீயினால் பாதிக்கப்பட்ட அவரை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் வானமாமலை மற்றும் அவரது அண்ணன் குபேந்திரன் ஆகிய இருவருக்குமிடையே சொத்து பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் குபேந்திரன் தனது தம்பி வானமாமலை தூங்கிக் கொண்டிருந்த போது அவர் மீது தின்னரை ஊற்றி தீ வைத்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக குபேந்திரனை மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே நெல்லையில் சிகிச்சை பெற்று வந்த வானமாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து குபேந்திரன் மீது மீது பதியப்பட்ட கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in தமிழகம்

To Top