தமிழகம்
முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மருத்துவமனையில் அனுமதி!
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் கடந்த ஜூன் 22ம் தேதி நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு இரண்டு நாட்கள் கழித்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் நேற்று இரவு சி.வி.சண்முகத்திற்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மீண்டும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.