தமிழகம்
ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து: சைதை துரைசாமி மகன் மாயம்!
முன்னாள் சென்னை மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனவமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சலில் உள்ள கஷங் நாலா பகுதியில் சட்லஜ் ஆற்றில் பயணித்த போது கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காரின் ஓட்டுநர் உயிரிழந்தார். மற்றொரு நபர் காயத்துடன் மீட்கப்பட்ட நிலையில் வெற்றி துரைசாமி மாயமாகி உள்ளார்.
மேலும், சைதை துரைசாமியின் மகன் வெற்றியை தேடும் பணி தீவீரம் நடந்து வருவதாக இமாசலப்பிரதேச காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.