Connect with us

Raj News Tamil

வீட்டுப் பணிப்பெண்ணை சூடு வைத்து துன்புறுத்திய திமுக எம்எல்ஏவின் மகன்

தமிழகம்

வீட்டுப் பணிப்பெண்ணை சூடு வைத்து துன்புறுத்திய திமுக எம்எல்ஏவின் மகன்

சென்னை பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் 18 வயது இளம்பெண் ஒருவர் வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளார்.

வீட்டில் அதிகமாக வேலை இருந்ததால் வேலைக்கு சேர்ந்த இரண்டு நாட்களில் தான் தனது வீட்டிற்கு செல்வதாக அந்த பெண் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன், தனது மனைவியுடன் சேர்ந்து அந்த இளம்பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் கைகள், கழுத்து, முதுகு மற்றும் முகத்திலும் சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகள் செர்லினா மீது நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டம், குழந்தைப் பாதுகாப்பு சட்டம், ஆபாசமாக பேசியது, தாக்கியது, மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து திமுக எல்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top