Trending
திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது வழக்குப் பதிவு..!
திமுக-வின் பேச்சாளராக இருப்பவர் சைதை சாதிக். அண்மையில் திமுக தலைவ்ராக முதலைமைச்சர் முக.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னை ஆர்கே நகரில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சாதிக், பாஜக-வை சேர்ந்த நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்திரி ரகுராம் மற்றும் கெளதமி ஆகியோரை டபுள் மீனிங் அர்த்தத்தில் பேசினார்.
இதுகுறித்து நடிகை குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் பெண்களை அவமதிக்கும் இவர்கள் தான் கலைஞர்களின் சீடர்களா..? இதுதான் திராவிட மாடலா..? என்று கேள்வி எழுப்பினார். மேலும் பாஜக தலைவர்கள் உள்ளிட்டோர் பலரும் கண்டங்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் சைதை சாதிக் மீது சைபர் க்ரைம் போலீசார் 5-பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
You must be logged in to post a comment Login