அரசியல்
அமமுக நிர்வாகி மீது தாக்குதல் : எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு
எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் பேருந்தில் சென்றபோது அமமுக பிரமுகர் ராஜேஷ்வரன் அவதூறாக பேசி பேஸ்புக்கில் நேரலை செய்துள்ளார். இதை பார்த்த எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் செல்போனை பிடுங்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் அமமுக நிர்வாகி ராஜேஷ்வரன் தாக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் அமைச்சர்கள் மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் மீதும் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login