அரசியல்
அமமுக நிர்வாகி மீது தாக்குதல் : எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு
எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் பேருந்தில் சென்றபோது அமமுக பிரமுகர் ராஜேஷ்வரன் அவதூறாக பேசி பேஸ்புக்கில் நேரலை செய்துள்ளார். இதை பார்த்த எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் செல்போனை பிடுங்கியதாக கூறப்படுகிறது.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/10/EPS-1.jpg)
இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் அமமுக நிர்வாகி ராஜேஷ்வரன் தாக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் அமைச்சர்கள் மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் மீதும் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)
You must be logged in to post a comment Login