அரசியல்
திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது வழக்குப்பதிவு
திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் என்பவர் மீது 3 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த திமுக தலைமை கழக பேச்சாளர் குடியாத்தம் குமரன். இவர் தனது YouTube பக்கத்தில் நடிகையும் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான விந்தியா குறித்து தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார்.
இதையடுத்து விந்தியா தேசிய மகளிர் ஆணையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், குடியாத்தம் குமரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.