Connect with us

Raj News Tamil

அண்ணாமலை மீது 6 – பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு..!

அரசியல்

அண்ணாமலை மீது 6 – பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு..!

சமீபத்தில் திமுக பேச்சாளர் சைதை சாதிக் பாஜக-வை சேர்ந்த குஷ்பு, நமீதா, கெளதமி, காயத்திரி ரகுராம் ஆகியோரை ஒருமையில் பேசினார். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அவர் மீது 5-பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் சாதிக்கின் பேச்சை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனுமதியின்றி நடைபெற்ற இப்போராட்டத்தில், கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மகளிரணி நிர்வாகிகள் என பலரும் கைது செய்யப்பட்டு, பின்னர் சில மணி நேரம் கழித்து விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் விடுதலை செய்யப்பட்ட அண்ணாமலை மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் சுமார் 370 பேர் மீது 6-பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in அரசியல்

To Top