பிரபல நகைக்கடையில் கொள்ளை.. வெளியான சிசிடிவி காட்சிகள்..

பீகார் மாநிலம் அரா பகுதியில், பிரபல தனியார் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடை வழக்கம் போல், இன்று காலை 10.30 மணிக்கு திறக்கப்பட்டுள்ளது.

அப்போது, முகமூடி அணிந்துக் கொண்டு, துப்பாக்கியுடன் வந்த 6 நபர்கள், வாடிக்கையாளர்களையும், நகைக்கடையின் ஊழியர்களையும் மிரட்டியுள்ளனர். இதையடுத்து, நகைக்கடையில் இருந்து 25 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, அங்கிருந்து தப்பிச் சென்ற அவர்களை, காவல்துறையினர் பிடிக்க முயன்றுள்ளனர். இந்த முயற்சியின்போது, கொள்ளையர்களில் 2 பேர், காயம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News