Connect with us

Raj News Tamil

ஜெயலலிதா நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க சிபிஐ உத்தரவு!

தமிழகம்

ஜெயலலிதா நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க சிபிஐ உத்தரவு!

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைர நகைகள் கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஜெயலலிதாவின் நகை உள்ளிட்ட பொருட்களை ஏலம் விட வேண்டும் எனவும், அதன்மூலம் வரும் பணத்தை நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் எனக்கோரி சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.ஏ.மோகன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, ‘ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விடுவதற்கு பதிலாக தமிழக உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கு மாற்றியதற்கான செலவுத் தொகையாக ரூ. 5 கோடியை தமிழக அரசு கர்நாடகத்துக்கு வழங்க வேண்டும்’ என்று கூறி உத்தரவிட்டுள்ளார்.

More in தமிழகம்

To Top