மண்டைக்கு ஏறிய போதை.. சாலையின் நடுவே படுத்த ‘குடி’மகன்.. தலையை நசுக்கிய லாரி.. கொடூர விபத்து..

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஆலச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். 34 வயதாகும் இவர், அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு, எடப்பாடி-பூலாம்பட்டி பிரதான சாலை வழியாக சென்றுள்ளார்.

அப்போது போதை தலைக்கு ஏறியதால், சாலையின் நடுவே படுத்து உறங்கியுள்ளார். அந்த சமயத்தில் அங்கு வந்த லாரி, அவரது தலையின் மீது ஏறியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே, பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, லாரி தலையில் ஏறிய சிசிடிவி காட்சிகள், தற்போது வெளியாகி, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News