Connect with us

Raj News Tamil

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகம்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழகம், புதுச்சேரியில் வியாழக்கிழமை (ஆக. 10) ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட் என்ற அளவிலும் சில இடங்களில் இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் வெப்பநிலை அதிகமாகவும் இருக்கக்கூடும்.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வியாழக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை (ஆக.10-15) வரை 6 நாள்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (ஆக.10-11) தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா அதையொட்டிய குமரிக் கடல் பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.10) மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top