வெளியானது சந்திரமுகி 2 பாடல் ! வைரலாகும் வரிகள்!

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கங்கனா ரனாவத் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். ‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஆகிய பன்மொழிகளில் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் அடுத்த பாடலான ‘தோரி போரி’ பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளிவந்துள்ளது . இதில், இடம்பெற்றுள்ள ‘அன்னை அன்பு முகத்தில் ஆண்டவனை கண்டிடலாம்’ போன்ற வரிகள் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

Recent News