தமிழகம்
வரும் ஜூலை 1-ம் தேதி முதல் சென்னை கடற்கரை – சேப்பாக்கம் இடையே பறக்கும் ரெயில் சேவை ரத்து..!!
ரெயில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசு ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதையடுத்து இந்த திட்டத்தை வேகமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்காக வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு 2024 ஜனவரி 31-ம் தேதி வரை சென்னை கடற்கரை – சேப்பாக்கம் இடையே பறக்கும் ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரெயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login