Connect with us

Raj News Tamil

சென்னை புத்தகக் காட்சி இன்று நடைபெறாது!

தமிழகம்

சென்னை புத்தகக் காட்சி இன்று நடைபெறாது!

கனமழை காரணமாக சென்னை புத்தகக் காட்சி இன்று நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் நிகழாண்டுக்கான 47 ஆவது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் வந்து செல்வதில் ஏற்படும் சிரமங்களுக்காக இன்று (ஜன.8) ஒரு நாள் மட்டும் புத்தகக் காட்சிக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. நாளை வழக்கம் போல புத்தகக் காட்சி செயல்படும். என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

More in தமிழகம்

To Top