தமிழகம்
குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் வசூல்…5 மாதத்தில் இத்தனை கோடிகளா??
சென்னை பெருநகர காவல்துறை விபத்தை குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச் சட்டத்தை திறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்து வருகிறது.
குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு சட்டத்தில் கடுமையான தடுப்பு நடவடிக்கையாக தண்டனை வழங்கப்படுகிறது. அபராதத் தொகை ரூ.10,000/ அதிகமாக இருப்பதால் பலர் அபராதத்தைச் செலுத்துவதில்லை. இதனால் 10,369 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 5 மாதங்களில் நிலுவையில் இருந்த 14,638 குடிபோதையில் வழக்குகள் தீர்க்கப்பட்டு ரூ.15கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
You must be logged in to post a comment Login