கள்ளச்சாராய விவகாரம்.. முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமீன்..

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சியது தொடர்பாக கைது செய்த செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகள் 2 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில், கள்ளச்சாராயம் காய்ச்சிய விவகாரத்தில் 21 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கு தற்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த கோவிந்தராஜ், தாமோதரன் ஆகிய 2 பேர், ஜாமீன் கோரி, மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீது விசாரணை நடந்தபோது, இருதரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டனர்.

இதையடுத்து, மறு உத்தரவு வரும்வரை, விசாரணை அதிகாரி முன்பு தினசரி ஆஜராக வேண்டும் என்று கூறி, குற்றவாளிகளுக்கு நிபந்தனை ஜாமீனை, நீதிபதிகள் வழங்கினர்.

RELATED ARTICLES

Recent News