சென்னை இந்தியன் ஆயில் பாய்லா் விபத்து: ஒருவா் உயிரிழப்பு ..!

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்று எண்ணெய் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கரிமேடு பகுதியை சோ்ந்த பெருமாள் ( 52 ) என்பவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்ட போது ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்ததால் அங்கு சில மணி நேரங்களுக்கு பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் எப்படி நடந்தது என்று? போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News