சென்னையில் நடைபெற்ற ஆம்ஸ்ட்ராங் கொலை தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் போலீஸ் பயிற்சி கல்லூரியின் டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக சென்னை மாநகர புதிய ஆணையராக அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.