சென்னை பன்முகத்தன்மையின் சமத்துவச் சங்கமம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
384-வது சென்னை தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:-
பேரறிஞர் அண்ணா தமிழ் நிலத்துக்கு, தமிழ்நாடெனப் பெயர் சூட்டினார். தமிழினத் தலைவர் கலைஞர் தமிழ்நாட்டின் தலைநகருக்குச் சென்னை எனப் பெயர் மாற்றினார்!
கோடிக்கணக்கான மக்களின் வாழ்வியலோடு பிணைந்துவிட்ட சொல் என்பதா – ஊர் என்பதா – உயிர் என்பதா சென்னையை?
சென்னை – ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி. பன்முகத்தன்மையின் சமத்துவச் சங்கமம்!
வாழிய வள்ளலார் சொன்ன ‘தருமமிகு சென்னை’! என்று தெரிவித்துள்ளார்.