தமிழகம்
செந்தில் பாலாஜி-க்கு நெஞ்சு வலி.. அறுவை சிகிச்சை நிறைவு!
தமிழகத்தின் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயதீர்வைத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி. இவருக்கு சொந்தமான இடங்களில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் முடிவில், அமலாக்கத்துறை அதிகாரிகள், செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இந்த அதிர்ச்சியை தாங்க முடியாத அவர், நெஞ்சு வலி ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக அரசின் அராஜக போக்கிற்கு இது ஒரு உதாரணம் என்று ஒரு சிலர் விமர்சித்து வந்தனர். இன்னொரு பக்கம், செந்தில் பாலாஜி நெஞ்சு வலி என்று நாடகம் ஆடுவதாகவும், கூறப்பட்டு வந்தது. இவ்வாறு இரண்டு பக்கமும், பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இதற்கிடையே, செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக, மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை, தற்போது நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவரது உடல்நிலையிலும், நல்ல முன்னேற்றம் இருப்பதாக கூறப்படுகிறது.
You must be logged in to post a comment Login