Connect with us

Raj News Tamil

ஏமாற்றிய காதலன்.. ஆண் வேடமிட்டு காதலி செய்த கொடூரம்.. திருமண மேடையில் பரபரப்பு..

இந்தியா

ஏமாற்றிய காதலன்.. ஆண் வேடமிட்டு காதலி செய்த கொடூரம்.. திருமண மேடையில் பரபரப்பு..

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியை சேர்ந்தவர் தம்ருதர். இவருக்கும் 19 வயதுடைய பெண் ஒருவருக்கும், பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண நாள் அன்று, அம்ருதர் மணமேடையில் அமர்ந்திருந்தார்.

அப்போது, அங்கு வந்த ஆண் ஒருவர், தன் கையில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து, அம்ருதர் மீது வீசினார். இதில், பலத்த காயம் அடைந்த அவர், அலறித் துடித்தார். இதையடுத்து, அம்ருதரை மீட்ட உறவினர்கள், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில், ஆசிட் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது ஆண் அல்ல என்றும், அது மணமகன் அம்ருதரின் முன்னாள் காதலி என்றும் தெரியவந்தது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், திடீரென வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள அம்ருதர் முன்வந்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த காதலி, ஆண் வேடமிட்டு, ஆசிட் வீசியது விசாரணையில், தெரியவந்துள்ளது. தன்னை ஏமாற்றிய காதலன் மீது காதலி ஆசிட் ஊற்றிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top