ஆட்டை பலி கொடுத்த நபர்.. கடைசியில் அந்த ஆடே வந்து அவர கொன்னுடுச்சே.. சத்தியமா இது உண்மைங்க..

ஆட்டை பலி கொடுப்பதற்கு கோவிலுக்கு சென்ற நபர், அந்த ஆட்டாலே உயிரிழந்துள்ள சம்பவம், தற்போது நடந்துள்ளது. இது தான் Karma is boomerang – ஆ என்று நெட்டிசன்கள் பலரும், கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதாவது, சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாகர் சாய். 50 வயதாகும் இவர், தனக்கு விருப்பமான கடவுளிடம், வேண்டுதல் ஒன்றை முன்வைத்துள்ளார்.

அது நடந்துவிட்டதால், ஆடு பலியிட்டு, படையல் வைப்பதற்கு முடிவு செய்தார். இதற்காக, ஆடு ஒன்றை வாங்கி, கோவிலில் பலியிட்டார். பின்னர், அந்த ஆட்டின் கறி சமைக்கப்பட்டு, உறவினர்கள் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

இந்நிலையில், பாகர் சாய்-க்கு, அந்த ஆட்டின் கண்கள் உணவில் வந்திருக்கிறது. இதனை ஆவலுடன் சாப்பிட்டபோது, அந்த கண்கள் தொண்டையில் சிக்கி, மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனால் பதற்றம் அடைந்த உறவினர்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், சிகிச்சை பலன் இன்றி, அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News