கள்ளக்காதல் குறித்து கேட்ட கணவன்.. மண்டையிலேயே ஒரே போடாக போட்ட மனைவி..

சட்டீஸ்கர் மாநிலம் மகாசமுந்த் மாவட்டத்தை சேர்ந்தவர் யூபேஷ் சந்திரகர். இவர் தனது மனைவி தேவிகாவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தேவிகாவுக்கும், முகுந்த் என்பவருக்கும் இடையே, கள்ளக்காதல் ஏற்பட்டு, இருவரும் பழகி வந்துள்ளனர்.

இதனை அறிந்த யூபேஷ் சந்திரகர், கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி அன்று, கடுமையாக குடித்துவிட்டு, கள்ளக்காதல் விவகாரம் குறித்து கேட்டு, மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், தனது கையில் இருந்த கட்டையை எடுத்து, கணவனை தேவிகா தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அவர், சுயநினைவு இன்றி, கீழே விழுந்துள்ளார்.

பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேவிகாவின் காதலன் முகுந்த், மயக்க நிலையில் இருந்த யூபேஷை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர், கழுத்தை நெறித்து அவரை கொன்ற முகுந்த், துணியை வைத்து மூடி வைத்துள்ளார்.

இதையடுத்து, அருகில் இருந்த கடையில் இருந்து, நைலான் கயிறு, பிளாஸ்டிக் ஷீட் வாங்கிய முகுந்த், உடலை பேக் செய்து, வீட்டிலேயே இரண்டு நாட்களுக்கு வைத்துள்ளார். கடந்த 10-ஆம் தேதி அன்று, ரிக்ஷாவில் உடலை ஏற்றிய முகுந்த், அதனை தன்னுடைய அலுவலகத்திற்கு எடுத்து சென்றுள்ளார்.

அன்று இரவு, முகுந்தின் அலுவலகத்திற்கு தேவிகாவும் வந்து, 5 அடி ஆழத்தில் குழி ஒன்றை தோண்டி, உடலை புதைத்துள்ளனர். பின்னர், 4 நாட்கள் கழித்து, டிசம்பர் 14-ஆம் தேதி அன்று, கணவர் காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர். ஆனால், நீண்ட நாட்கள் ஆகியும், காவல்துறையினரால், யூபேஷை கண்டுபிடிக்கவில்லை.

மேலும், புகார் அளித்ததோடு, வழக்கு தொடர்பாக எந்தவொரு தகவல்களையும், தேவிகா பின்பற்றவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், தேவிகாவின் செல்போன் அழைப்புகளை பரிசோதித்துள்ளனர். அதன்மூலம், அவர் முகுந்திடம் கள்ளக்காதலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதை வைத்து வழக்கில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்த்த காவல்துறையினர், அந்த இரண்டு பேரையும் கைது செய்தனர். இவர்கள் இரண்டு பேரும் தற்போது நீதிமன்ற காவலில் இருந்து வருகின்றனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக, தேவிகாவின் தாய் அஞ்சனியிடமும், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News