Connect with us

Raj News Tamil

பங்காரு அடிகளார் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!

தமிழகம்

பங்காரு அடிகளார் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!

தமிழகம் உள்பட உலகம் முழுவதும் ‘அம்மா’ என்று அழைக்கப்படும் மேல்மருவத்தூா் பங்காரு அடிகளார் (83) உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை (அக்.19) மறைந்தார்.

உடல்நலக் குறைவால் மறைந்த மேல்மருவத்தூா் பங்காரு அடிகளார் உடல் இன்று மாலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது.

செங்கல்பட்டு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மேல்மருத்துவர் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ஏராளமான பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில் பாதுகாப்புப் பணியில் 2,500 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

More in தமிழகம்

To Top