குழந்தைகள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை: யுனிசெப் அமைப்பு!

காசாவில் குழந்தைகள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

யுனிசெப் அமைப்பு கூறுகையில்,

“இஸ்ரேல் – ஹமாஸ் போரால் காசாவில் 10 லட்சத்துக்கும் மேலான குழந்தைகள் நோய் பாதிக்கப்படும் தருவாயில் உள்ளனர். பல குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் குழந்தைகளுக்கு கொடுங்கனவாகவே நகர்கிறது. தண்ணீர், உணவு இல்லாமல் தவிக்கின்றனர். குழந்தைகள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இந்தப் போரில் குழந்தைகள். பொதுமக்கள் பாதிக்கப்படாமல் தடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கான அத்தியாவசிய உதவிகளாவது கிடைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News