சினிமா
சந்தேகப்பட்ட நெட்டிசன்கள்.. குழந்தைக்கு பால் கொடுத்த சின்மயி!
பாடகி சின்மயி, கடந்த 2014-ஆம் ஆண்டு அன்று, நடிகர் ரவீந்தரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிகளுக்கு, கடந்த 8 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் இரட்டை குழந்தை பிறந்தது.
ஆனால், இவரது கர்ப்ப கால புகைப்படங்கள் எதுவும் வெளியாகத காரணத்தால், இவரும் வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டதாக, நெட்டிசன்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இதற்கு தற்போது பதிலடி தந்துள்ள சின்மயி, தனது குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதன்மூலம், அவர் வாடகைத் தாய் முறையின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
You must be logged in to post a comment Login