Connect with us

Raj News Tamil

சென்னை மாநகர பேருந்தில் பயணிகள் இடையே மோதல்!

தமிழகம்

சென்னை மாநகர பேருந்தில் பயணிகள் இடையே மோதல்!

சென்னை பிராட்வேயில் இருந்து கலைஞர் நகர் செல்லக்கூடிய 17d பேருந்து வள்ளுவர் கோட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கூட்டநெரிசல் காரணமாக இருக்கையில் அமர்வது தொடர்பாக இரண்டு பயணிகள் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருவரும் மாறிமாறி தாக்கி கொண்டனர்.

இதில் ஒருவருக்கு தலையில் ரத்தம் வர ஆரம்பித்தது அதையும் பொருட்படுத்தாமல் தொடந்து இருவரும் தாக்கி கொண்டதால் பேருந்து ஓட்டுனர் வள்ளுவர் கோட்டம் பகுதியில் பேருந்து நிறுத்தி வைத்து காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

வள்ளுவர் கோட்டம் பேருந்து நிலையத்திற்கு வந்த நுங்கம்பாக்கம் காவல்துறையினர் தகராறு ஈடுபட்ட இருவரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டார்.

காவல்துறை வருகைக்கு பின்னர் பேருந்து வள்ளுவர் கோட்டம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டது இட பிரச்சனை ஏற்பட்டதால் 45 நிமிடம் பேருந்து தாமதமானது இதனால் சக பயணிகள் சிரமம் அடைந்தனர். குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதன் காரணமாகவே பேருந்தில் கூட்ட நெரிசலை அதிகரித்து இது போன்ற தகராறுகள் ஏற்படுகின்றது என சக பயணிகள் குற்றம் சாட்டினர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top