தமிழகம்
விடுதியில் கூட்டுறவு வங்கி உதவியாளர் தற்கொலை!
தர்மபுரி மாவட்டம் மேல் வீதி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார் (45), இவர் அதே பகுதியில் உள்ள அரசு கூட்டுறவு வங்கியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி கீதா என்ற மனைவியும் இனுங குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி சென்னைக்கு வந்த அசோக் குமார் ஜாம்பஜார் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
மறுநாள் காலை 7 மணி அளவில் அறையை காலி செய்வதாக கூறிவிட்டு சென்ற அசோக்குமார் மாலை வரை வெளியே வராததால் சந்தேகம் அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் அறைக்குச் சென்று பார்த்தனர். அப்போது அறை உள்பக்கமாக பூட்டி இருந்ததால் சந்தேகமடைந்து ஊழியர்கள் அறை சாவியை கொண்டு வந்து திறந்து உள்ளே சென்று பார்த்த போது அசோக்குமார் தூக்கில் பிணமாக இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகம் ஜாம்பஜார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அசோக்குமார் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அசோக் குமார் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதும் தற்கொலைக்கு முன்பு வாட்ஸ் அப்பில் தனது மனைவிக்கு தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் என்னை பற்றி கவலைப்பட வேண்டாம், குடும்பத்தை நல்லபடியாக பார்த்துக் கொள்ளுமாறு தகவல் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதனை அடுத்து போலீசார் அவரது உறவினர்களுடன் தகவல் தெரிவித்துடன் இது தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.