Connect with us

Raj News Tamil

மாணவனை திருமணம் செய்த கல்லூரி விரிவுரையாளர்.. 28-க்கு 24-ன் மீது காதல்.. நடந்தது என்ன?

தமிழகம்

மாணவனை திருமணம் செய்த கல்லூரி விரிவுரையாளர்.. 28-க்கு 24-ன் மீது காதல்.. நடந்தது என்ன?

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்தவர் மீனா. 28 வயதான இவர், அங்குள்ள தனியார் கலைக் கல்லூரியில், ஆங்கிலத்துறையின் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும், அதே கல்லூரியில் பயின்று வரும் பிரவீன் ( 24 ) என்ற மாணவனுக்கும் இடையே, காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த கல்லூரி நிர்வாகத்தினரும், பெற்றோரும், அவர்கள் 2 பேரையும் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 8-ஆம் தேதி அன்று திருமணம் செய்துக் கொண்ட காதல் ஜோடியினர், பாதுகாப்பு கேட்டு, காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதையடுத்து, இருவீட்டாரையும் காவல்நிலையத்திற்கு அழைத்த காவல்துறையினர், பேச்சுவார்த்தை நடத்தினர்.

இறுதியில், இருவரும் மேஜர் என்பதால், பிரவீனுடன் அந்த பெண்ணை காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவனை, விரிவுரையாளர் திருமணம் செய்துக் கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top