தாம்பரம் அருகே கல்லூரி மாணவி மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த பாரத் நகர் பகுதியை சேர்ந்தவர் நித்திய ஜீவன் (19) ராஜகீழ்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனதில் பகுதி நேரமாக வேலை பார்த்துவிட்டு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் நித்தியாவின் தந்தை ஆப்ரஹாம் உடல்நிலை சரியில்லாமல் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது தாயாரும் மருத்துவமனையில் உள்ளார்.
நேற்று இரவு நித்தியாவின் தாய் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது எடுக்காததால் அருகில் உள்ள அவரது சகோதரியிடம் சென்று பார்க்க சொன்ன போது வெகு நேரமாக கதவை திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது நித்தியா மர்மமான முறையில் மின்விசிரியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தகவல் அறிந்து வந்த சேலையூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.