தமிழகம்
பேருந்தில் படியில் தொங்கிய கல்லூரி மாணவர்கள்: லாரி சக்கரத்தில் சிக்கி 4 பேர் பலி!
செங்கல்பட்டு அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து விபத்தில் கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுநாகலூர் அருகே பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி கல்லூரி மாணவர்கள் பயணித்துள்ளனர்.
பேருந்தை முந்திச் செல்ல முயன்ற கண்டெய்னர் லாரி உரசியதில், 4 மாணவர்கள் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.