Connect with us

Raj News Tamil

அஜித் படக்குழுவினர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்..என்ன நடந்தது?

சினிமா

அஜித் படக்குழுவினர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்..என்ன நடந்தது?

கடந்த 2022ம் ஆண்டு எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் வலிமை. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதே நேரத்தில் 200 கோடிக்கு மேல் வசூலித்தது.

இப்படம் வெளியாகி ஒரு வருடத்தை கடக்கவுள்ள நிலையில், ராஜேஷ் ராஜா என்ற குறும்பட இயக்குநர், ‘வலிமை’ படக்குழு மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் வலிமை படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள், 2019 ஆம் ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான ‘தங்க சங்கிலி’ என்ற குறும்படத்தில் இடம்பெற்ற 10 காட்சிகள் போல் உள்ளதாகக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக எச் வினோத்தை சந்திக்க பலமுறை முயற்சி செய்தும் அவரை சந்திக்க முடியவில்லை என்றும் அதனால் தனது பிரச்சினைக்கு தீர்வு காண போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை அணுகியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top