Connect with us

Raj News Tamil

சாலையில் சென்றவர்கள் மீது பீய்ச்சியடித்த கான்கிரீட் கலவை…ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

தமிழகம்

சாலையில் சென்றவர்கள் மீது பீய்ச்சியடித்த கான்கிரீட் கலவை…ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

சென்னை குரோம்பேட்டை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று கான்கிரீட் போடும் பணிகள் நடைபெற்றது. அப்போது திடீரென இரும்பு பைப் உடைந்து சாலையில் சென்ற நபர்கள் மீது காங்கிரீட் கலவை பீய்ச்சி அடித்தது. இதில், குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சந்தானம் என்பவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் அங்கிருந்த பொதுமக்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முறையாக தடுப்புகள் அமைக்காமல் பாதுகாப்பின்றி பணி மேற்கொள்வதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டார்.

இதனால் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் பேருந்து நிலையத்தில் இருந்து பல்லாவரம் வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top