தமிழகம்
கஞ்சா விற்பனை செய்வதில் மோதல்: வாலிபரை கடத்தி கொலை!
பூந்தமல்லி அடுத்த நசரப்பேட்டை, ஆறுமுகம் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன் என்ற கருக்கா ஸ்டீபன் (22), இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று இரவு இவரது வீட்டின் அருகே இருந்த போது மர்ம நபர்கள் காரில் கடத்தி சென்றனர் இதையடுத்து அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் ஸ்டீபனை கடத்தி சென்ற நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலை மலையம்பாக்கம் அருகே கடத்தப்பட்ட ஸ்டீபன் கொலை செய்யப்பட்டு கிடந்ததும் மர்ம நபர்கள் அவரது உடல் பாகங்களை வெட்ட முயற்சி செய்து வருவதாக வந்த தகவலையடுத்து நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது தப்பி ஓட முயன்ற ஈசாக், விக்னேஷ் ஆகிய இருவரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர் மேலும் கொலை செய்யப்பட்டு
கிடந்த ஸ்டீபன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கஞ்சா விற்பனை செய்வதில் இவர்களுக்குள் போட்டி இருந்ததாகவும், ஈசாக்கு தரப்பினர் கஞ்சா விற்பனை செய்தால் அவர்கள் குறித்து ஸ்டீபன் போலீசாரிடம் தகவல் தெரிவித்ததாகவும் இவர்களுக்குள் முன் விரோதம் இருந்த காரணத்தால் ஸ்டீபனை கடத்தி சென்று கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஈசாக் தரப்பினரை ஸ்டீபன் தாக்கியதாகவும் அதனால் ஏற்பட்ட காரணத்தால் கொலை நடந்திருப்பதாகவும் மேலும் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு குன்றத்தூர் பகுதியில் கொலை செய்யப்பட்ட நபரின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி அகற்றிய நிலையில் அதே பாணியில் ஸ்டீபன் உடலை வெட்டி அகற்ற முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.