காஷ்மீரில் 47 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

ஜம்மு, ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இதன்படி, முதல்கட்ட தேர்தல் செப்டம்பர் 18-ந்தேதியும், 2-வது கட்ட தேர்தல் செப்டம்பர் 25-ந்தேதியும் நடைபெற்றது. 3-வது கட்ட தேர்தல் கடந்த 1-ந்தேதி நடைபெற்று முடிந்தது.

இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி (ஜே.கே.என்.சி.) மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆனது, ஆட்சியமைக்க தேவையான மெஜாரிட்டிக்கான தொகுதிகளை கடந்து முன்னிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 46 தொகுதிகளை கைப்பற்றினால், அந்த கட்சியோ அல்லது கூட்டணியோ ஆட்சியமைக்க கூடிய சூழலில், காங்கிரஸ் கூட்டணி 47 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

RELATED ARTICLES

Recent News