சினிமா
தொடர் பரிசுகள் பெரும் மாமன்னன் படக்கலைஞர்கள் !
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் பல விமர்சனங்களை தாண்டி நல்லதொரு வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் மாமன்னன் .உதயநிதியின் இறுதி படமாகவும், வடிவேலுவின் புதுவித நடிப்பும் மக்களை கவர்ந்து வருகிறது.
இந்நிலையில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ,படத்திற்கு சிறப்பு சேர்த்த கலைஞர்களுக்கு புதுவித பரிசுகளை வழங்கிவருகிறது .
இந்நிலையில், வைகைப்புயல் வடிவேலுவுக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த நிலையில்,தற்போது சிறுவயது அதிவீரன் கதாபாத்திரத்தில் நடித்த நடித்த சூர்யா என்னும் சிறுவனுக்கு உதயநிதி மற்றும் மாரிசெல்வராஜ் ஆகிய இருவரும் மடிக்கணினி வழங்கி பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
மேலும் இது குறித்த புகைப்படங்களை உதயநிதி தனது ட்விட்டர் தளத்தில் ஷேர் செய்து “மாமன்னன் திரைப்படத்தில் சிறு வயது அதிவீரனாக சிறந்ததோர் நடிப்பை வெளிப்படுத்திய தம்பி சூர்யாவை இன்று நேரில் வாழ்த்தினோம். அவரது கல்விக்கு உதவிடும் வகையில் லேப்டாப் வழங்கி மகிழ்ந்தோம். சூர்யாவின் கல்விக்கும், வளர்ச்சிக்கும் என்றும் துணை நிற்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.