Connect with us

Raj News Tamil

தொடரும் காா் தீ விபத்து ! 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு !

தமிழகம்

தொடரும் காா் தீ விபத்து ! 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு !

சேலம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ள நண்பரின் திருமணத்திற்கு இன்று அதிகாலை காரில் புறப்பட்டு சென்றுள்ளா்.இந்நிலையில், சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி கிழக்குக்காடு அருகே மேம்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது காரின் முன்பகுதியில் திடீரென தீப்பற்றிக் கொண்டது. இதனை அறிந்து சுதாரித்துக் கொண்ட மணிகண்டன் காரை நிறுத்தினார். உடனடியாக 5 பேரும் காரில் இருந்து கீழே இறங்கி ஓடினர்.

மேலும், தீ காா் முழுவதும் எாிந்தது, பின்னா் தவலறிந்துவிரைந்து வந்த தீயணைப்புத்துறையினா், 1 மணிநேரம்போராடி தீயயைகட்டுக்குள் வந்தனா்.இதனால், அப்பகுதியினிடையே போக்குவரத்து நொிசல் ஏற்பட்டதுபின்னா் வாழப்பாடி போலீசாா் அக்காரை அப்புறப்படுத்தினா். இச்சம்பவம் அப்பகுதியினிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top