Connect with us

கொரோனா தடுப்பூசியால் ‘ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம்: நிறுவனம் ஒப்புதல்!

தமிழகம்

கொரோனா தடுப்பூசியால் ‘ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம்: நிறுவனம் ஒப்புதல்!

‘கோவிஷீல்டு’ தடுப்பூசியால் ‘ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை உண்டாக்கும் சார்ஸ் கோவிட் வைரஸை கட்டுப்படுத்த, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ராஸெனெகா ஆராய்ச்சியாளர்களால் தயாரிக்கப்பட்ட ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டதால் பல்வேறு தீவிர உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும், உயிரிழப்பும் ஏற்படுவதாகவும் குற்றஞ்சாற்றப்பட்டுள்ளது.

பாதுகாப்புக் காரணங்களை மேற்கோள் காட்டி, வேக்ஸ்ஸேவ்ரியா என்ற பெயரிலும் அழைக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பிரிட்டனில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பிரிட்டனில் அனுமதி மறுக்கப்படும் முன், அங்கு இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்ட ஜேமி ஸ்காட் என்ற நபருக்கு, ஆஸ்ட்ராஸெனெகா தயாரித்த தடுப்பூசியை செலுத்திக்கொண்டதால் மூளையில் தீவிர பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு, ஏப்ரலில் ஜேமி ஸ்காட்க்கு முதன்முதலில் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் மூளையில் ரத்தம் உறைந்து நிரந்தர பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆஸ்ட்ராஸெனெகா நிறுவனம் மீது ஜேமி ஸ்காட்டால் பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையில் ஆஸ்ட்ராஸெனெகா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், அந்நிறுவனத்தின் தயாரிப்பான ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டோரில், ஒரு சிலருக்கு ‘ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்படும் ‘த்ரோம்போஸைடோபேனியா சிண்ட்ரோம்’ பாதிப்புடன் கூடிய ‘த்ரோம்போஸிஸ்’ காரணமாக, ரத்தத்தில் (பிளேட்லெட்ஸ்) ரத்த தட்டுக்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு குறித்த விரிவான தகவல் விரைவில் வெளியிடப்படுமென்று தெரிகிறது. இந்தியாவில், ‘கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் உரிமையை செரம் நிறுவனம் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top