Connect with us

Raj News Tamil

“ஜூன் 4 இன்னொரு ஹோலி” – நம்பிக்கையோடு சொன்ன ஜே.பி.நட்டா!

அரசியல்

“ஜூன் 4 இன்னொரு ஹோலி” – நம்பிக்கையோடு சொன்ன ஜே.பி.நட்டா!

2024-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல், 7 கட்டங்களாக நடைபெற இருப்பதாகவும், ஒவ்வொரு மாநிலத்திற்கான தேர்தல் தேதியையும் , தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்திருந்தது.

இதனையடுத்து, ஒவ்வொரு அரசியல் கட்சியும், மிகவும் பரபரப்பாக பின்னணி பணிகளை முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா, ஜூன் 4-ஆம் தேதி அன்று, இந்திய தேசம், இன்னொரு முறை ஹோலியை கொண்டாடும் என்று, நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-

“நான் என்னுடைய வாழ்த்துக்களை நாட்டு நாட்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஹோலி பண்டிகை, சந்தோஷத்தையும், அமைதியையும், அனைவரது வாழ்க்கையிலும் கொண்டு வர வாழ்த்துக்கிறேன்.

பிரதமர் மோடி தலைமையிலான நமது தேசம், முன்னோக்கி செல்வதற்கு, நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். இது தொடர்ச்சியாக நடக்க வேண்டும்.

நாம் இப்போது ஹோலி கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், நமது தேசம் வரும் ஜூன் 4-ஆம் தேதி அன்று, பிரதமர் மோடியின் தலைமையில் மீண்டும் ஹோலி கொண்டாடுவோம்” என்று கூறியுள்ளார்.

More in அரசியல்

To Top